22 Jan 2010

படித்த கவிதை

சில வருடங்களுக்கு முன் ராஜேஷ்குமாரின் ஒரு நாவலில் படித்த கவிதை.
இதை எழுதியது யாரென்று தெரியவில்லை..


அந்தரத்தில் ஒரு உப்பரிகை
அதில் ஒரு சொப்பனத்து சுந்தரி
நேர் கீழே பொருத்திப்பார்க்க இரு மல்லர்கள்
நெருங்கி வந்தார்
கிசுகிசுத்தார்
நீசமகள் ஞானமில்லா வெற்றலகுப் பிண்டம்
இதைப் பெற்றுவிட போரிடவா என்றார்
விட்டுவிடு என்றார்
விலகி நின்றார்
உப்பரிகை நிலா உள்முற்றம் போயிற்று.

20 Jan 2010

அமில மழை அபாயம்

எனக்கு பகிரப்பட்ட ஒரு மின்மடலின் எச்சரிக்கை..

சமீபத்தில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் காரணமாக அமில மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்(யாரு?).

சனவரி 20 முதல் 28 ஆம் வரை பெய்யும் மழையில் நனைவதால் நமது தோலுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், அதனால் மழையில் நனைவதை தவிர்க்க வேண்டியும் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.

ஆகவே நண்பர்களே, இந்த வாரம் மழையில் நனைவதை தவிர்த்து விடுங்கள்.
இது ஒரு தவறான தகவல் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

14 Jan 2010

ஆனந்த விகடன் விலை 100 ரூபாய்


இரு வாரங்களுக்கு முன் எனது நண்பர் ஆனந்த விகடன் வாங்க கோபி சென்றுள்ளார். அது அவர் வழக்கமாக புத்தகம் வாங்கும் கடைதான். 15 ரூபாய் கொடுத்து புத்தகம் கேட்டபோது கடைக்காரரோ இந்த வார இதழ் 100 ரூபாய் என்று சொல்லியுள்ளார். ஏனென்று கேட்டதற்கு ஏர்செல் சிம் இலவசம் அதனால் தான் என்று சொல்லியிருக்குறார்.

இவரோ புத்தகத்தில் 15 ரூபாய் தானே போட்டுருக்கு என்று கேட்டதற்கு, அதெல்லாம் தெரியாது 100 ரூபாய் தான் என்றுள்ளார். சரி எனக்கு சிம் வேணாம் புத்தகம் மட்டும் கொடுங்க போதும் என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் தரமுடியாது என்று கடைக்காரர் சொல்ல இவர் ஆனந்தவிகடன் அலுவலகதிற்கு போன் செய்துள்ளார். ஆனால் அங்கு யாரும் போனை எடுக்கவில்லை.

வீட்டிக்கு வந்து மீண்டும் போன் செய்துள்ளார், அப்போது பேசிய ஒருவர் இவரிடம் என்ன விசயம் என்று கேட்டுவிட்டு, நாங்கள் புத்தகத்திற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறியுள்ளார். சரி கடைக்காரர் மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்று கேட்க, அவரை நாங்கள் எதுவும் செய்ய முடியாது, கேட்டால் நான் வேறு கடையில் இருந்து வாங்கி வந்து விற்கிறேன் என்பார் என்று சொல்லிவிட்டு நண்பரின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார்களாம்.

சிறுது நேரம் கழித்து கோபி பகுதி முகவர் போன் செய்து தனக்காக வைத்திருக்கும் புத்தகத்தை தருவதாக கூறியுள்ளார். அவரும் புத்தகம் மட்டும் வேண்டுமா இல்லை சிம் கார்டும் வேண்டுமா என்று கேட்டுள்ளார். ஆனந்த விகடன் புத்தகத்துடன் வரும் எல்லாமே வேண்டும் என்று சொல்லி இவரும் வாங்கி வந்துள்ளார்.

யாரிடம் சொன்னால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று தெரியாமல் என்னிடம் புலம்பினார். அந்த வாரம் நான் சிம் கார்டு மற்றும் அந்த சின்ன இணைப்பு புத்தகம் இல்லாமல் ஆனந்த விகடன் வாங்கியதை அவரிடம் நான் சொல்லவில்லை.

13 Jan 2010

பொங்கல் வாழ்த்து












விவசாயம்
மறந்து
வெள்ளாமை தொலைந்து
விளைநிலம் வீட்டு மனையாகிய

இந்த பொன்னாளில்
நானும் சொல்லிக்கொள்கிறேன்
இனிய பொங்கல் நல்வாழ்த்'துக்க'ள்..

11 Jan 2010

இன்றைய தமிழகம்

தமிழகத்தின் இன்றைய நிலையையும், இதே நிலை நீடித்தால் ஏற்படப்போகும் விபரீதங்களையும் உரைக்கும் வகையில் எனக்கு பகிரப்பட்ட ஒரு மின்னஞ்சல் கீழே...


ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?
நான் கேட்டேன் கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார் - என்னைப் பார்
1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு உறங்கிடுவேன்,
போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் - நான் யார் தெரியுமா?
தமிழ் நாட்டுக் குடிமகன்
நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்,
சமைப்பதற்கு கேஸும் அடுப்பும் இலவசம்,
பொழுது போக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்,
எதற்காக உழைக்க வேண்டும்?
நான் கேட்டேன் - உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்தபடி உரைத்தார்,
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 சிகிச்சையுடன் இலவசம்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய் 25000 இலவசம்,
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்,
நான் எதற்கு உழைக்க வேண்டும்!!
வியந்து போனேன் நான்,
ஏன் உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை!!
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?
உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை!!
உழைப்பவர் சேமிப்பைக் களவாட தலைப்படுவாய்!!!
இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்
அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை
தமிழா விழித்திடு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!
நாளைய தமிழகம் நம் கையில்,
உடன்பிறப்பே சிந்திப்பாயா??
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!!


எங்க ஊர்காரங்க..