28 Mar 2010

பெங்களூரிலிருந்து சிறப்பு ரயில்கள்

எர்ணாகுளம் - பெங்களுரு 

ரயில் எண்: 0651 

எர்ணாகுளத்தில் புறப்படும் நேரம்: 18.50 (ஒவ்வொரு திங்கள் கிழமையும் ஏப்ரல் 5 முதல் ஜூன் 15 வரை)

ரயில் எண்: 0653 

எர்ணாகுளத்தில் புறப்படும் நேரம்: 21.15 (ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஏப்ரல் 5 முதல் ஜூன் 15 வரை)

பெங்களுரு - எர்ணாகுளம்

ரயில் எண்: 0652 

பெங்களூரில் புறப்படும் நேரம்: 17.15 (ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஏப்ரல் 5 முதல் ஜூன் 15 வரை)

ரயில் எண்: 0654 

பெங்களூரில் புறப்படும் நேரம்: 18.50 (ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஏப்ரல் 5 முதல் ஜூன் 15 வரை) 


ரயில்கள் நின்று செல்லும் இடங்கள்: அலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திருபத்தூர், குப்பம், பங்காருபேட், Whitefield, கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களுரு கண்ட்.


12 Mar 2010

வெயில், சிறுநீரக கல் மற்றும் கொத்தமல்லி



வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு. இனிமேல், சிலருக்கு தூங்கிகிட்டு இருந்த சிறுநீரக கல் பிரச்சினை தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடும்.

காலம்காலமா சிறுநீரகத்தோட வேலையே ரத்தத்தில் கலந்துருக்குற தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியா வெளியேத்துறது தான். ஆனா இந்த வெயில் காலத்துல உடம்பில் இருக்குற நீரெல்லாம் வியர்வையாகவே ஆவியாகிடரதுனால உப்புகள் எல்லாம் சிறுநீரகத்துலயே தங்குறதுனால தான் கல் உருவாகுதாம். அதனால இனிமேல் எல்லோரும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதான் கெட்ட உப்பு எல்லாம் சிறுநீரோட வெளியேறும்.

அதோட சிறுநீரகத்த சுத்தமா வச்சுக்க எளிய செலவில் ஒரு இயற்கை வழி இருக்குதாம். ஒரு குத்து 'கொத்தமல்லி தழை' மற்றும் 'தனியா' எடுத்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீரை ஊற்றி பத்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் ஆறவைத்து வடிகட்டி சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி குளிர்பதன பெட்டியில் வைத்து, பிறகு குடிக்கவும்.

இதுபோல தினமும் ஒரு டம்ளர் அளவு இந்த ஆகாரத்தை குடித்து வந்தால் உடம்பிலுள்ள கெட்ட சத்துகள் மற்றும் தேவையற்ற உப்புகளனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.
கொத்தமல்லி சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படுகிறது.

மேலும் இது இயற்கையாக விளையும் பொருள் என்பதால் வேறு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. முயற்சி செய்து பாருங்களேன்.

9 Mar 2010

நடுவணரசின் தில்லாலங்கடி..

பஸ்ஸில்(Buzz) எனக்கு வந்த ஒரு தகவல்..

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?
இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?

நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

5 Mar 2010

செல்பேசி எண் மாற்றத் தேவையில்லா வசதி (Mobile Number Portability)

செல்பேசி எண்ணை மாற்றாமலே நமக்கு சேவையளிக்கும் நிறுவனத்தை மாற்றும் வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது புலி வருது கதையாகவே இருக்குது.

இந்த மாதிரி ஒரு வசதி வருதுனு சொன்னவுடனே, ஆகா இனிமேல் செல்பேசி எண்ண மாத்தறதுக்கு பயந்துட்டு நல்ல வசதி கொடுக்கற சேவையாளருக்கு மாத்திக்க பயப்படத் தேவையில்லைன்னு நினைச்சோம். ஆனா, இப்போ அந்த வசதிய ஏதாவது ஒரு காரணம் சொல்லி தள்ளிப் போட்டுட்டே இருக்காங்க.

அநேகமாக கடந்த நடுவணரசில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இதுவென்று நினைக்கிறேன். முதல் தவணை நாளாக டிசம்பர் 31, 2009 அறிவிக்கப்பட்டது. பிறகு சேவை நிறுவனங்கள் உள்கட்டமைப்பு செய்ய கால அவகாசம் கேட்டன. பிறகு அரசு நிறுவனங்கள் BSNL மற்றும் MTNL உள்கட்டமைப்பு வேலை காரணமாக அது மீண்டும் மார்ச் 31, 2010 க்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

இப்போது இந்த சேவையை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றான "US-based Telcordia Technologies" பாதுகாப்பு வேலைகளை சரிவர செய்ய வேண்டும் என்பதற்காக மேலும் இரண்டு மாதங்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதாவது மே மாத இறுதியில் இது பயன்பாட்டுக்கு வரும் என்கிறார்கள்.(வருமா?)

இந்தியா முழுவதும் இந்த வசதிய அறிமுகப்படுத்த இரு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கி இருக்காங்களாம். ஒன்னு"US-based Telcordia Technologies" இன்னொன்னு "Syniverse Technologies". அடுத்தது இவங்கனால ரண்டு மாசம் தள்ளிப்போடப் போறாங்களா?


என்னதான் நடக்குது அங்க..

எங்க ஊர்காரங்க..