கூட்ட நெரிசலை தவிர்க்க தென்னக ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
இன்று (04-02-2010)முதல் முன்பதிவு தொடங்குகிறது.
ரயில்களின் விவரம்:
1. சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் – சென்னை சென்ட்ரல்
ரயில் எண்: 0621 சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் 22.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். இந்த ரயில் 5.2.2010 முதல் 26.3.2010 வரை அனைத்து வெள்ளிகிழமைகளிலும் ஓடும்.
ரயில் எண்: 0622 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் 23.55 மணிக்கு கோயம்பத்தூரில் இருந்து புறப்படும். இந்த ரயில் 7.2.2010 முதல் 28.3.2010 வரை அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் ஓடும்.
இந்த ரெயிலில் 2 முதல் வகுப்பு, 1 மூன்றாம் வகுப்பு (குளிர்சாதன வசதி), 8 இரண்டாம் வகுப்பு படுக்கை, 4 பொது வகுப்பு பெட்டிகள் உள்ளன.
ரயில் நின்று செல்லும் இடங்கள்: காட்பாடி, ஜோலார்பேட்டை , சேலம், ஈரோடு, மற்றும் திருப்பூர்.
2. சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல்
ரயில் எண்: 0601 சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் 20.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். இந்த ரயில் 5.2.2010 முதல் 26.3.2010 வரை அனைத்து வெள்ளிகிழமைகளிலும் ஓடும்.
ரயில் எண்: 0602 நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் 16.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும். இந்த ரயில் 6.2.2010 முதல் 27.3.2010 வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் ஓடும்.
இந்த ரயிலில் 2 இரண்டாம் வகுப்பு (குளிர்சாதன வசதி), 2 மூன்றாம் வகுப்பு (குளிர்சாதன வசதி), 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் உள்ளன.
ரயில் நின்று செல்லும் இடங்கள்: காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர்.
3 கருத்துக்கள்..:
தம்பி, வணக்கம், நன்றி பகிர்தலுக்கு!
பெங்களூர்.... ஈரோடு இருக்கா?
@பழமைபேசி
அண்ணா வணக்கமுங், நன்றிங்கோவ்..
@வானம்பாடிகள்
நன்றிங்க ஐயா..
@ ஈரோடு கதிர்
பெங்களூர்.... ஈரோடு சிறப்பு ரயில் இல்லிங். நன்றிங்க..
தமிழில் தட்டச்ச..
உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..