25 Oct 2010

உன்னதமான உறவுகள்

இருவேறு மின்னஞ்சல் இருவேறு கணவர்கள்..


மின்னஞ்சல்: 1

ஒரு இளம்பெண்ணின் நினைவலையில்,

நான் சின்னப் பெண்ணாக இருக்கும் போது எனது அம்மா இரவு உணவுக்காக எப்போதும் காலை நேரம் செய்யப்படும் எளிய உணவுகளையே சமைப்பாள். அன்றொரு இரவு மிக கடுமையான பல வேலைகளுக்கு பிறகு இதேபோல் ஒரு காலை உணவை தயார் செய்தாள். அன்றைய இரவு உணவாக முட்டையுடன் கொஞ்சம் அதிகமாக வறுக்கப்பட்ட ரொட்டியை அப்பாவுக்காக வைத்திருந்தார். என் தந்தை கோவப்படுவாரோ என்று நான் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஆனால், என் தந்தை என்ன செய்தாரென்றால் அம்மாவைப் பார்த்து புன்னகைத்து விட்டு, எனது அன்றைய நாளின் பள்ளி அனுபவத்தைக் கேட்டுக் கொண்டே சாப்பிடத் தொடங்கினார். நான் அவரிடம் என்ன சொன்னேன் என்பது சரியாக ஞாபகம் இல்லை. ஆனால், அவர் ஜாம் தடவிக்கொண்டே அந்த ரொட்டியை சாப்பிட்டது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது. நான் அந்த இடத்தைவிட்டு செல்லும் போது என் அம்மா ரொட்டி தீய்ந்து போனதற்காக அப்பாவிடம் மன்னிப்பு கேட்டது காதில் விழுந்தது. "அதனாலென்ன, எனக்கு அதிகமாக வறுபட்ட ரொட்டி ரொம்ப பிடிக்கும்" என்று அப்பா சொன்னதை என்னால் மறக்கவே முடியாது.

அன்றிரவு படுக்கையில் அப்பாவின் மேல் அமர்ந்து கொண்டு, உண்மையிலேயே உங்களுக்கு தீய்ந்து போன ரொட்டி பிடிக்குமா என்று கேட்டேன். என்னை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டே சொன்னார், "நாள் முழுவதும் செய்த கடின வேலைகளால் உன் அம்மா மிகவும் களைப்பாக இருந்தாள். மேலும் ரொட்டி கொஞ்சம் தீய்ந்து போனால் ஒன்றும் குறைத்து விடாது". உனக்கு ஒரு விசயம் தெரியுமா, "வாழ்க்கையில் எல்லாமே ஒழுங்கில்லாத பொருள்கள், ஒழுங்கில்லாத மனிதர்கள் தான்..".

இதுவரையில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், மற்றவர்களின் தவறை ஏற்றுக் கொள்வதுதான். அடுத்தவர்களை மாற்றுக்கருத்தை ஏற்றுக் கொள்ளவோ பாராட்டவோ செய்வது உறவுகளை பலப்படுத்த வளர்க்க உதவும். காய்ந்த ரொட்டி உறவுக்கு ஒரு பெரிய தடைக்கல்லாக அமைந்து விடாது. உறவுகளை சரியாக புரிந்து கொள்வதே கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தை நெருக்கத்தை, நட்பை உருவாக்கும்.

உங்களது மகிழ்ச்சியின் திறவுகோலை அடுத்தவர் கையில் கொடுக்காதீர்கள். அது உங்களிடமே இருக்கட்டும். உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்போதும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மறந்து விடுவார்கள், நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள். ஆனால், உங்களால் உணரப்பட்ட ஒன்றை என்றும் மறக்க முடியாது.


மின்னஞ்சல்: 2

ஒரு கணவன், மனைவி ஜெருசலம் சுற்றுலா சென்ற போது எதிர்பாரா விதமாக மனைவி இறந்து விட்டார். மனைவி உடலை ஊருக்கு கொண்டுசெல்ல 50000 ரூபாயும், அங்கேயே சடங்குகளை முடிக்க 1500 ரூபாயும் செலவாகும் என்று அறிந்த கணவர் ஊருக்கே கொண்டுசெல்ல முடிவு செய்தார். எதற்காக தேவையில்லாமல் 50000 ரூபாய் செலவு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்னார். "ரொம்ப நாள் முன்பு ஜீசுஸ் கிறிஸ்ட் என்பவர் இங்கே இறந்து, அவரது உடலை எரித்து மூன்று நாட்களுக்கு பிறகு உயிர் பிழைத்து விட்டாராம். நான் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை..!!".

3 கருத்துக்கள்..:

க.பாலாசி said...

முதல் மின்னஞ்சல் ரொம்ப நெகிழ்ச்சியானதுங்க..அதன் கடைசி பத்தி எவ்வளவு அழுத்தமான ஆத்மார்த்தமான வரிகளை உள்ளடக்கியிருக்கிறது. ரொம்ப நெகிழ்ச்சியான மின்னஞ்சல்..

இரண்டாவது நேரெதிர்..சிறு புன்னகை போதுமானது...

எஸ்.கே said...

இரண்டுமே நல்லாயிருந்ததுங்க!

Unknown said...

நன்றிங்க க.பாலாசி..
நன்றிங்க எஸ்.கே..

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..